நண்டு முருங்கைக்காய் குருமா செய்வது எப்படி? #Kuruma





நண்டு முருங்கைக்காய் குருமா செய்வது எப்படி? #Kuruma

2 minute read
முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. 
நண்டு முருங்கைக்காய் குருமா
காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. 
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்: 

நண்டு – 1/2 கிலோ 

அரைத்த தேங்காய் ‍- ஒரு பிடியளவு 

இஞ்சி பூண்டு – 3 ஸ்பூன் 

மிளகாய்த் தூள் ‍- 4 ஸ்பூன் 

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 

மிளகு ஜீரகத்தூள் – 3 ஸ்பூன் 

கறி மசாலாத் தூள் – 2 ஸ்பூன் 

மல்லித் தூள் ‍ – 6 ஸ்பூன் 

உப்பு – தேவை யானது 

முருங்கைக் காய் பெரியது – 1 

வெங்காயம் பெரியது – 1 

தக்காளி – 1 ப.மிளகாய் – 2 

கறிவேப்பிலை – 1 கொத்து 
செய்முறை: 

சுத்தம் செய்த நண்டுகளுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டும் சிறிது உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி, அத்துடன் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு ஜீரகத் தூள், கறி மசாலாத்தூள், மல்லித் தூள் அனைத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ள‌ வேண்டும். 
கைநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கீறிய ப. மிளகாயை தாளித்து, கால் பகுதி வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்துப் போட்டு தாளிக்கவும். வெங்காயம் முறுக ஆரம்பித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப் பிலைப் போட்டு தாளிக்கவும். 

பிறகு மீதியுள்ள 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, அரிந்த தக்காளி யையும் மீதியுள்ள வெங்காய த்தையும் போட்டு நன்கு வதக்கவும். 

தக்காளி, வெங்காயம் குழைந்து வரும்போது பிரட்டி வைத்துள்ள நண்டு மசாலாவைக் கொட்டி வதக்கி, 3/4 டம்ளர் அளவு தண்ணீர் 

மற்றும் தேவைக்கு உப்பும் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு நறுக்கிய முருங்கைக் காயை நீள வாக்கில் கீறி விட்டு அத்துடன் சேர்த்து பிரட்டி, 2 நிமிடம் மட்டும் மீண்டும் மூடி போட்டு வைக்கவும். 
(அதிக நேரம் வைத்தால் முருங்கைக் காய் பழுத்து விடும்) இப்போது முருங்கைக் காய் வெந்து விட்டதை உறுத்தி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய் சேர்த்து பிரட்டி விட்டு, சுமார் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க‌வும். 

சுவையான, சத்து நிறைந்த‌ நண்டு முருங்கைக் காய் குருமா தயார்! சூடாக (வோ ஆறியோ கூட) பரிமாற சுவையாக இருக்கும். 

டிப்ஸ்: 

நண்டு சமைக்கும் போது அதன் கால்களை வெயிட்டான கரண்டி போன்ற பொருளால் மேல் தோடு உடையு மளவு தட்டி விட்டு 
எலும்புகள் பலமாக இருக்க என்ன செய்ய வேண்டும் !
அல்லது Nut Cutter கொண்டு மெதுவாக உடைத்து விட்டு சமைத்தால், அதன் உள்ளே மசாலா வின் சுவை நன்கு ஏறும். சாப்பிடும் போதும் சுலபமாக இருக்கும்.
Tags:
Random Posts Blogger Widget
Today | 17, April 2025