சூப்பரான கேரட் குருமா தயாரிப்பது எப்படி? #Kuruma





சூப்பரான கேரட் குருமா தயாரிப்பது எப்படி? #Kuruma

கண்களைக் கவரும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கேரட், பார்ப்பதற்கு மட்டுமல்ல வெறுமனையாக சாப்பிடுவதற்கும் சிறந்தது. இது, சுவைக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தது. 
சூப்பரான கேரட் குருமா தயாரிப்பது எப்படி?
இது உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண்பார்வையை பெறுவது வரை எக்கச்சக்கமான சத்துக்களை வழங்குகிறது. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
அதில், உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால், சர்க்கரை அளவை கேரட் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில், உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய செல்களை உருவாக்குகிறது.

இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். இதனால், எளிமையாக உடல் எடையை குறைக்கலாம்.
தேவையான பொருள்கள்:

கேரட் - அரை கிலோ

தேங்காய் - 1 மூடி

பச்சைமிளகாய் - 5

கசகசா - 2 மேசைக் கரண்டி

இஞ்சி - ஒரு சிறியதுண்டு

பூண்டு - 10 பல்

வெங்காயம் - 2

தக்காளி - 100 கிராம்

சோம்பு - 1 மேசைக் கரண்டி

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 3
மஞ்சள் பொடி - சிறிதளவு

பிரிஞ்சி இலை - 1

எண்ணெய் - 4 மேசைக் கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
சூப்பரான கேரட் குருமா தயாரிப்பது எப்படி?
கேரட்டை நீளவாக்கில் துண்டு களாக்கிக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாயையும் நீளநீளமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சிப்பூண்டு தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் தூவி சோம்போடு அரைக்கவும். பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகிய வற்றை லேசாகத் தட்டிக் கொள்ளவும்.

பேனில் எண்ணெய் விட்டு முதலில் பிரிஞ்சி இலையை இரண்டாகப் பிய்த்துப் போடவும். அடுத்து தட்டி வைத்துள்ள மசாலாப் பொடியைப் போடவும். 
அவை சிவந்து வரும் போது வெங்காயம் சேர்த்து வதக்கவும். இது சிவந்ததும் கீறிய பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி ஆகிய வற்றை சேர்த்து வதக்கவும்.
அடுத்து கேரட்டைப் போட்டு மேலும் வதக்கி தேங்காய் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து அரை கிண்ணம் தண்ணீர் விட்டு வேக விடவும். 

ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடவும். கடைசியாக இதனோடு கறிவேப்பிலை கொத்துமல்லி சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும். 

இதை சாதம், சப்பாத்தி, பரோட்டா, பூரி, இடியாப்பம், தோசை, நூடுல்ஸ் ஆகிய வற்றோடு பரிமாறவும்.
Tags: